Posts

Showing posts from October, 2020

எனது பார்வையில் ஹைக்கூ (கா.ந.கல்யாணசுந்தரம்)

Image
  எனது பார்வையில் ஹைக்கூ  ஞாலம் கருதினும் கைகூடும் காலம்  கருதி இடத்தான் செயின் வள்ளுவர் கூறிய வாய்மொழிக்கு ஏற்ப காலம் மனிதனின் வாழ்நிலையை நிர்ணயம் செய்கிறது. காலத்தே வாய்ப்புகளை நழுவவிடாது ஏற்ப செயல்படவேண்டும்.. அதே போல இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதே மிக மிகக் கடினமான சூழல் மானுடத்துக்கு ஏற்பட்டுள்ளது.  நேரம் கருதியே வாசிப்புத் தன்மையும் மாறி வருகிறது. குறுகிய நேரத்தில் வாசித்து ஆழ்ந்த சிந்தனையும் சிறப்பான செய்திகளையும் சுருங்கக் கூறுதல் இப்போதுள்ள ஹைக்கூ கவிதைகளுக்கு மட்டுமே உள்ளது.  ஹைக்கூ என்பது வெறுமனே எழுதக்கூடிய மூன்று வரிகள் அல்ல.  5/7/5 என்ற மரபு ஹைக்கூக்களைத் துறந்து தமிழ் தற்போது மாறுபட்ட ஹைக்கூ வடிவத்தினை அரவணைத்துக் கொண்டுள்ளது.  எளிய சொற்கள் மட்டுமே ஹைக்கூ ஆகாது. முதல் இரண்டு வரிகளில் ஒரு செய்தியை, நிகழ்வை, காட்சியை மிகைப்படுத்தல் கூறுதல் வேண்டும். அலங்காரச் சொற்கள் தவிர்த்தல் அவசியமாகிறது. நிகழ் காலத்தைக் கையிலெடுத்துக் கொண்டு மனதில் காட்சியை நிலைபெறச்செய்தல் கூடுதல் சிறப்பு. மூன்றாவது வரி மின்னலென அற்புதமான முதலிரண்டு வரிகளுக்கு தொடர்புட...

எது கவிதை - (மீராசாகிபு சமூன்)

Image
  எது கவிதை? கதை விதை கவிதை அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன்  ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப் பட்ட  எதுகை மோனை சார்ந்த  ஆடையின் ஓர் எழுத்து இலக்கியக் கலையின் கவிதை வடிவம் நவீன உலகின் அனுபவங்கள் கவிஞனின் ஆழ்மனதிற்கு இழுத்துச் செல்லும் போது கவிதைகளின் வலியினைக் காண்டறிகிறான் தீக்குச்சி உரசும் போது தீப்பற்றி எறிவதுபோல் ஒரு கவிஞனின் எழுது கோலும் அப்படித்தான் கூறாத நாவும் ஆறாகப் பொங்கும் அஞ்சாக் கவிக்குயில்களின் சருகுகளின் சான்று  கூறுவதும் என் கடனே ... ஒவ்வொரு கணமும் நூறு திரைகளைத் கிழித்து விழ்ந்திடச் செய்கிறது போகும்படி விட்டு விட்டு வாழ்வின் முதலும் இறுதியுமாக காலடி எடுத்து பாதம் இல்லாமல் கடந்து செல்லும் போதும் சிறந்த படைப்புகள் கவிஞனை சுமந்து அடையாளம் காட்டி நிற்கிறது .. என் பார்வை உலகின் கவிதை இதுதான் ஒரு பட்ட மரத்தின் வேரின் நுனியிலிருந்து சட்டென்று எந்த தாவரமும் கனிக்கு திரும்புவதில்லை அரும்பு மொட்டு மலர் பூ பிஞ்சு காய் கனியென பரிணாம வளர்ச்சியில் மீண்டும் விதையாகிறது இவ்வாறே ஒரு படைப்பின் தன்மையும் அதற்க்கான ஆடைகள் கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது ... ...

எனது பார்வையில் ஹைக்கூ (ரேணுகா ஸ்டாலின்)

Image
  #என்_பார்வையில்_ஹைக்கூ(ரேணுகா ஸ்டாலின்) புல்மேல் பனித்துளியாய் வெயில் பட்டதும் கரைந்து ஆவியாகும் நீரல்ல ஹைக்கூ. ஆலம் விழுதென கிளை பரப்பி புதுப்பொலிவுடன் புத்துணர்வூட்டும் சக்தியும், யுக்தியும் கொண்டது ஹைக்கூவும் அதன் கிளை வடிவங்களுமே. 14ம் நூற்றாண்டில் மலர்ந்து 19ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டினுள் கால் பதித்து தன் கவிவடிவத்தால் தன்னிகரில்லா வளர்ச்சியடைந்த கற்பக விருட்சம் ஹைக்கூ. வாசிப்பை நேசிக்கும் வாசகனையும் படைப்பாளியாக்கி தன்பால் மயக்கும் மாயவிந்தை ஹைக்கூ அதன் எளிய கவிவடிவத்தாலும் மரபு, உவமை மற்றும் கற்பனை போன்ற இலக்கிய வரம்புகளை தகர்த்தெறிந்து நிகழ்காலமே நிதர்சனம் எனும் உலக நியதியை விளக்கும் விதமாக உள்ளதை உள்ளபடி உணர்த்தி ரசிக்கத் தூண்டும் பாங்கு போன்றவற்றாலும் கவி உலகில் கடைநிலை மாணவியான என்னையும் கவர்ந்திழுத்து தன்பால் கட்டிப்போட்டது. மனக்கிடங்கின் எண்ணங்களை மூவரியில் அடக்கி அழகிய காட்சியாக்கி ரசிக்கச் செய்வதோடு ஒரு நிமிட குறும்படமாக மனக்கண்களில் விரிந்து மணம் பரப்புவதே காலத்தை வென்ற ஹைக்கூவாக நிலைத்திருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. பலரின் ஹைக்கூ விளக்கங்களையும் , பல...

19.வெண்பா இலக்கணம்(அகன் )

Image
  வெண்பா இலக்கணம் - 19. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡  இனிய வணக்கம். இதுவரை வெண்பாவின் வகைகளான  01. குறள் வெண்பா, 02. சிந்தியல் வெண்பா, 03. அளவியல் வெண்பா, 04. பஃறொடை வெண்பா மற்றும் 05. கலி வெண்பாக்களையும் அவற்றின் உட்பிரிவுகளையும் பார்த்தோம். இவை எல்லாவற்றிலும் பொதுவான ஒரு நிலையை உங்களுக்குத் தொகுத்துத் தருகிறேன். 01. #குறள் வெண்பா #இரண்டடிகளால் ஆனது. 02. #சிந்தியல் வெண்பா #மூன்றடிகளால் ஆனது. 03. #அளவியல் வெண்பா #நான்கடிகளால் ஆனது. 04. #பஃறொடை வெண்பா #ஐந்தடி_தொடங்கி #பன்னிரண்டு_அடிகளால் ஆனது 05. #கலி_வெண்பா_பதின்மூன்று_அடி_தொடங்கி #பேரெல்லை_கவிஞரின்_விருப்பம்_போல அமையும். 06. அனைத்து அடிகளிலும் #இயற்சீர்_வெண்டளை மற்றும் #வெண்சீர்_வெண்டளை மட்டுமே வரும். 07. எல்லா வகை வெண்பாக்களிலும் ஈற்றடி தவிர மற்ற அடிகள் அளவடியாகவும் (நான்கு சீர்கள்) ஈற்றடி மட்டும் சிந்தடியாகவும் (மூன்று சீர்கள்) அமையும். 08. எல்லா வகை வெண்பாவிலும் ஈற்றடி #நாள், #மலர், #காசு மற்றும் #பிறப்பு என்னும் வாய்பாடிலேயே நிறைவடைகிறது. ஆகவே, அடிப்படை இலக்கணம் தெரிந்தால் போதும். கூடுதலாக நல்ல சொல் வளம், கற்பனைத் திறன...

எனது பார்வையில் ஹைக்கூ (த.யாசகன்)

Image
  எனது பார்வையில் ஹைக்கூ - த.யாசகன் ✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍ அனைவருக்கும் இனிய வணக்கங்கள் இன்று கவிஞர்களின் விருப்பத்திற்கு உரியதும், திறமை இதுவே என வியக்க வைத்ததுமான ஹைக்கூவை சிறியவனான எனது பார்வையில் எனக்கேயான தனித்துவத்தோடு நோக்குகிறேன்..  ஹைக்கூ என்பது யப்பான் மொழியில் இருந்து வந்திருப்பினும் தமிழ்ச் சுவையாலே அதிகம் கவரப்பட்டு உள்ளதென்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. காரணம் தமிழ் மொழிக் கவிஞர்கள் பலர் இவற்றை ஆராய்ந்து வேகமாகத் தமிழில் சரளமாக எழுதும் ஆற்றலை வளர்த்துள்ளமையே ஆகும். அப்படி தமிழில் நான் இரசித்து ஹைக்கூ கவியின்பக்கம் என்னைத் திருப்பிய கவிதையாக எச்சில் இலை / மேல் நோக்கிப் பறக்கிறது / பசியாறிய காகம் / தனா சர்மா. ஈழம். என்ற ஹைக்கூவைக் குறிப்பிடுவேன் அதுபோல இன்று பல கவிஞர்களின் சிறந்த பல ஹைக்கூக்களால் கவரப்பட்டு அவர்களின் திறமைகண்டு வியக்கும் மாணவனாக உள்ளேன். இனி விடயத்தை நோக்குவோம். ஹைக்கூ நாம் கண்ட காட்சியைச் சுருக்கமாக மற்றவர்க்கு விளங்கும் வகையில் உவமை மற்றும் கற்பனைகள் இன்றி  கரு ,கோணம், பொருள் இவைகள் அடங்கலாக ஒன்றுக்கு மேற்பட்ட காட்சியை உண்மைத் தன்மையுடன் அமைக்க...

எனது பார்வையில் ஹைக்கூ (ரசி குணா)

Image
  எனது பார்வையில் ஹைக்கூ  (ரசி குணா) ✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍ ஹைக்கூ மூன்று வரியில்  விதிகளுக்குட்பட ஒரு காட்சியைச் சொல்லி முடிப்பது அவ்வளவு  எளிதல்ல இருந்தும் மெல்ல மெல்ல சூட்சுமம் அறிந்தபின்னர் இன்பக் கடலுக்குள் இறங்கிக் கொண்டே போகலாம் இருந்தும் ஹைக்கூ ஆழம்  காணமுடியாத அற்புதமாகும்! காலந்தோறும் கற்றுக் கொண்டே  இருக்கலாம் போலவே தோன்றும். ஹைக்கூவில் மூன்று வரிகளின்  சாராம்சம் இவைகள் தான்  -------- கரு ------------ கோணம்  ------ பொருள்                (கரு) முதலாவது கரு, ஹைக்கூவில் மிகவும் முக்கியமான ஒன்று கருதான்  ஆகவே நல்லதொரு கருவில் எழுதப்படும் ஹைக்கூகள் மட்டுமே  காலம் கடந்தும் பேசப்படும். நாம் இறந்து விட்டால் கூட அக் ஹைக்கூகள் காலத்தை வென்று வலம் வரும். சிறிய சிறிய காட்சிகளைக் கொண்டு ஹைக்கூ எழுதினாலும் அதை சிறப்பாக எழுத  முயற்சி செய்யலாம் சிறு வெட்டுக்கிளியைக் கூட  சிறப்பித்துப் பாடலாம்  இயற்கையை ரசியுங்கள் பழுத்து விழும் ஒரு இலையின் அவலத்தைக்கூட நம்மால்  உணர்ந்து கொள்ள மு...

எனது பார்வையில் ஹைக்கூ (வே.புகழேந்தி)

Image
  எனது பார்வையில் ஹைக்கூ *********************************             மூன்று அடிகளில் படைக்கப்படும் ஹைக்கூகளை முழு மூச்சுடன் ஆராய்கையில் முக்கனிகளின் சுவை கிடைத்திடுமென்றால் மிகையாகாது. செம்மொழியாம் தமிழ் மொழியில் ஹைக்கூகளை புனைவதற்கென்றே சான்றோர்கள் பல விதிமுறைகளை வகுத்துள்ளனர். ஹைக்கூ கவிஞர்களும் அவற்றை வேத வாக்கியமாக ஏற்று ஹைக்கூ என்னும் மூன்று வரி காவியத்தை முனைப்புடன் இயற்றி வருகின்றனர்.       குறிப்பாக ஹைக்கூகளை தன்மையில் (First person - அதாவது, நான், நாம், எனது,  எந்தன் என்று ) படைத்தல் தவறு என்பது தமிழில் ஹைக்கூ எழுதிடும் பாவலர்கள் கடைபிடித்து வரும் முக்கியமானதொரு கோட்பாடாகும்.  ஆனால் நமது நாட்டின் வேற்று மொழிகளில் காலம் காலமாக தன்மையில் ஆரம்பமாகும் ஹைக்கூகளை சர்வ சாதாணமாக எழுதி வருகின்றனர்  ஹைக்கூ கவிஞர்கள். பாஷோவின் முக்கிய சீடர்களில் ஒருவரான Katsushika Hokusai (கத்ஸுஷிகா ஹொகுசாய்) என்பவரின் ஹைக்கூகளை ஆராய்வோமானால் பல ஹைக்கூகளை அவர் தன்மையில் (First person) படைத்திருப்பது கண்கூடாகும். உதாரணத்திற்கு ஒன்றை இங...

ஹைக்கூ எழுதுவது எப்படி ? (சத்தார்)

Image
  ஹைக்கூ எழுதுவது எப்படி ?   #ஹைக்கூ_விதிகள் """''''""""""""""""""""""""""""" "சும்மா ஒரு முழு வசனத்தை மூன்றாக உடைத்துப் போட்டால் அதுதானே ஹைக்கூ..?" என்று ஒரு நண்பர் என்னிடம் ஏளனமாகக் கேட்டார். அவருக்கு நான் "ஆம் " என்று விடையளித்து அப் பேச்சை  அங்கேயே வெட்டி விட்டேன். அவரைப் போலத்தான் பலரும் நினைத்திருக்கிறார்கள் போலும். ஆனால் மற்றெந்தக் கவி  வடிவங்களுக்கும் இல்லாத வகையில் மிக அதிகமாக இலக்கண வரம்புகள் இருப்பது ஹைக்கூவுக்குத்தான். ஜப்பானிலிருந்து இவ்வடிவம் நேராகத் தமிழுக்கு வராமல் முதலில்  ஆங்கிலத்திற்குச் சென்று பின்னர்தான் தமிழுக்கு வந்தது. அந்த இடைவெளியில் சில காரணங்களுக்காக மிகச் சில விதிகள்   மாற்றமடைந்திருப்பதை அறியக் கிடைக்கிறது. உதாரணமாக ஹொக்கூ வை (ஹைக்கூவின் முதற் பெயர்) உருவாக்கிய ஜப்பானியராகிய பாஷோ உவமை உருவகங்களை அவரது கவிதைகளில் பாவித்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் வட அமெரிக்காவில் குறிப்பாக...

லிமரைக்கூ விளக்கம் (அகன்)

Image
  லிமரைக்கூ - எளிய விளக்கம். ☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡  இனிய  வணக்கம். #லிமரைக்கூ என்பது மூன்று வரிகள் கொண்ட கவிதை வடிவம். இது முதல் வரியிலும், மூன்றாவது வரியிலும் #இயைபுத்_தொடையுடன் அமையும் #குறும்பா ஆகும். இதனை #இயைபுத்_துளிப்பா என்றும் அழைப்பர். ஆங்கில மொழியில் ஹைக்கூ மற்றும் லிமரிக் வடிவங்களை இணைத்து ஒரு கலப்பு இனக் குறும்பா கண்டுபிடிக்கப் பட்டது. முதன்முதலில் இதை உருவாக்கியவர் டெட் பாக்கர் (Ted Pauker) என்னும் கவிஞர். இவர் தம் கலப்பு இனக் குறும்பாவுக்கு லிமரைக்கூ(லிமரிக் + ஹைக்கூ) என்று பெயரிட்டார். பாடம் தொடங்கும் முன்னர் இயைபுத் தொடை என்றால் என்னவென்று பார்க்கலாமா… இயைபுத் தொடை என்றால் என்ன…? சந்தேகம் வருகிறதல்லவா…! சொல்கிறேன். இது செய்யுள் இலக்கணத்தின் பாற்பட்டது. நமக்கு இங்கே லிமரைக்கூ. வடிவம். அவ்வளவு தான். ஒரு லிமரைக்கூவில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் (நமக்கு மூன்று அடிகள் தானே) #இறுதி_எழுத்து அல்லது #இறுதிச்_சொல் ஒத்து வரும் போது அஃது இயைபுத் தொடை என்று கூறப் படுகின்றது. 01. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் #இறுதி_எழுத்துகள்_ஒன்றி_வருதல். 02. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் #...

லிமரிக் விளக்கம் (அகன் )

Image
.’’லிமரிக்’’ என்னும் கவிதை வடிவம். <^> - <^> - <^> - <^> - <^> - <^> - <^> - <^> சமீபத்தில் #ஹைக்கூ_கவிதையைப் பற்றி ஒரு பதிவு செய்திருந்தேன். அடுத்து, #லிமரைக்கூ_கவிதையைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால், லிமரைக்கூ #லிமரிக்_என்ற_தகப்பனுக்கும்_ஹைக்கூ என்ற தாய்க்கும் பிறந்த குழந்தை என்பதால் தகப்பனான லிமரிக் பற்றி எழுதி விட்டு லிமரைக்கூவை எழுதலாம் என்று நினைக்கிறேன். லிமரிக் என்னும் கவிதை வடிவம். - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ‘’லிமரிக்’’ என்பது ஆங்கிலத்தில் தோன்றிய ஐந்து அடிகள் கொண்ட சிறிய கவிதை வகையாகும். நாம் தமிழில் #இயைபுத்_தொடை’ என்று சொல்வதை ஆங்கிலத்தில் #ரைம்(Rhyme) என்று சொல்கிறார்கள். வானம் தனியழகு. அதில் வலம்வரும் பூமியில் பகலிரவு. நானே முழுநிலவு. இன்ப நதிக்கரை யில்என் சுகக்கனவு. இஃது, ஓர் இசைப் பாடலுக்காக நான் எழுதியப் பல்லவி. இதில், முதல் அடியின் இறுதி சீர் #தனியழகு - ‘’உ’’கரத்தில் முடிகிறது. அடுத்து, 2, 3 மற்றும் 4 ஆம் அடிகளின் இறுதி சீரைப் பாருங்கள் #பகலிரவு. #முழுநிலவு மற்றும் #சுகக்கனவு என...

ஹைக்கூ விளக்கம் (அகன்)

Image
  ஹைக்கூ என்றால் என்ன? ^> - <^> - <^> - <^> - <^> - <^> ‘’#ஹைக்கூ_என்றால்_என்ன?’’ என்று எனக்குத் தெரிந்ததையே, நான் அறிந்ததையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மூன்று அடிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் கொண்டு அமைவது ஹைக்கூ என்று தெரியும். குத்து மதிப்பாக, தமிழில் இரண்டு சீர்கள்(ஐந்து அசைகள்), ஜப்பானில் ஐந்து எழுத்துகள். மூன்று சீர்கள்(ஏழு அசைகள்), ஜப்பானில் ஏழு எழுத்துகள். இரண்டு சீர்கள்(ஐந்து அசைகள்) ஜப்பானில் ஐந்து எழுத்துகள் என 17 அசைகள் - ஜப்பானில் 17 எழுத்துகள் - கொண்டு அமைக்கப் பெறும் #ஜப்பானியக்_கவிதை_வடிவம்_ஹைக்கூ.. ஜப்பானிய மொழியில் ஓர் எழுத்து = தமிழ் மொழியில் ஓர் அசை. சரி, தமிழுக்கு வருவோம்.. அசைகள் இரண்டு. அவை, நேர் அசை, நிரை அசை: அசைகளின் சேர்க்கையே சீர்: சீர் ஓரசைச் சீர், ஈரசைச் சீர், மூவசைச் சீர், நான்கசைச் சீர் என பல வகைப் படும் ஹைக்கூ மிகக் குறைந்த சொற்களைக் கொண்டு நேரடியாகவும், மறைமுகமாவும் அதிக கருத்துகளை வெளிப் படுத்துகிறது என்பதே உண்மை. நோக்கம் போல கட்டுப் பாடில்லாமல் எழுதுவதையும், சீர் அசை இலக்கணத்துக்குக் கட்டுப் படாததையும...

18.வெண்பா இலக்கணம்(அகன் )

Image
  வெண்பா இலக்கணம்  - 18. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀   இனிய வணக்கம். அடுத்தது, நாம் பார்க்க இருப்பது வெண்பா வகைகளில் ஐந்தாவது வகையான #கலி_வெண்பா ஆகும். முழுக்க முழுக்க வெண்டளைகளைக் கொண்ட இந்தப் பாவுக்கு ஏன் கலி வெண்பா என்ற பெயர் வந்ததென்று அறிய முடியவில்லை. வெண்பா வகைமையைச் சேர்ந்த இந்த வெண்பாவிற்கு கலி வெண்பா என்ற பெயர் வந்தது போலவே வெண்பா இலக்கணத்துக்குள் அடங்காத, வெண்பாவின் சாயலில் உள்ள ஒரு பாடல் வகைமைக்கு “#வெண்_கலிப்பா” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அதை அடுத்த பதிவில்  காண்போம். #கலி_வெண்பா. - - - - - - - - - - - - - - - வெண்பாவுக்கு உரிய அனைத்து இலக்கணங்களும் பொருந்தி வர பன்னிரண்டு அடிகளுக்கு மேல் பதின்மூன்று அடிகளில் தொடங்கி எத்தனை அடிகள் வேண்டுமானாலும் கலி வெண்பாவில் வரலாம். கலி வெண்பாவுக்கு அடி சிற்றெல்லை பதின்மூன்று. பேரெல்லை கவிஞரின் மனம் போல எல்லை கிடையாது. இங்கு இருபது அடிகளால் ஆன ஒரு விகற்ப நேரிசை கலி வெண்பாவைக் காணலாம். கலி வெண்பாவிலும் பஃறொடை வெண்பாவைப் போலவே நான்கு வகை உள்ளன. அவை, 01. ஒரு விகற்ப நேரிசை கலி வெண்பா, 02. ஒரு விகற்ப இன்னிசை கலி வ...

20.எளியமுறை தமிழ் இலக்கணம்

Image
  எளியமுறை இலக்கணம் - 20. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀  இனிய வணக்கம். #பொருளதிகாரம். - - - - - - - - - - - - - - - - - தொல்காப்பியம் சொல்லும் 01. எழுத்ததிகாரம், 02. சொல்லதிகாரம் இரண்டையும் பார்த்தோம். அவை இரண்டும் #தமிழ்_மொழியின்_இயல்பைக்_கூறும் அதிகாரங்கள். அடுத்து, மூன்றாவதாக உள்ள #பொருளதிகாரத்தைக் காண்போம். #பொருளதிகாரம்_தமிழ்_மக்களின்_வாழ்வியலைக்_கூறும்_அதிகாரம் ஆகும். பொருளதிகாரத்தை ஆழமாகப் பார்க்கப் போனால், நமது இலக்கான #யாப்பிலக்கணத்தையும், #அணி_இலக்கணத்தையும் காண #கால_தாமதம்_ஆகுமென்பதால் பொருளதிகாரத்தை மேலோட்டமாகப் பார்ப்போம். பொருளதிகாரத்தில் ஒன்பது இயல்கள் உள்ளன. அவை, 01. அகத்திணை இயல், 02. புறத்திணை இயல், 03. களவியல், 04. கற்பியல், 05. பொருளியல், 06. மெய்ப்பாட்டு இயல், 07. உவம இயல், 08. செய்யுளியல் மற்றும் 09. மரபியல் ஆகும். இவை எவற்றைக் கூறுகின்றன எனப் பார்க்கலாம். 01. & 02. #அகத்திணை_இயல் மற்றும் #புறத்திணை_இயல். #திணை என்றால் என்ன என்பதையும் அகத்திணை, புறத்திணை எவ்வாறு பிரிக்கப் பட்டது என்பதையும் இது விளக்குகிறது. அகத்திணையில் உள்ள ஏழு பிரிவுகளையும் அவற்றிற்...

19.எளியமுறை தமிழ் இலக்கணம்

Image
  எளியமுறை இலக்கணம் - 19. .🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀  இ னிய  வணக்கம். உரிச் சொல் குறிக்கும் குணங்களைப்(பண்புகளைப்) பின் வருமாறு வகைப் படுத்தலாம். அவை, 01. உயர்திணைப் பண்புகள் மற்றும் 02. அஃறிணைப் பண்புகள் ஆகும். 01. #உயர்திணைப்_பண்புகள். உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார் ஆசிரியர். அவை, 01. அறிவு, 02. அருள், 03 ஆசை, 04. அச்சம், 05. மானம், 06. நிறைவு, 07. பொறை (பொறுமை), 08. ஓர்ப்பு (தெளிவு), 09. கடைப்பிடித்தல், 10. மையல் (மயக்கம்), 11. நினைவு, 12. வெறுப்பு, 13. உவப்பு (மகிழ்வு), 14. இரக்கம், 15. நாண்(நாணம்), 16. வெகுளி (கோபம்), 17. துணிவு, 18. அழுக்காறு (பொறாமை), 19. அன்பு, 20. எளிமை, 21. எய்த்தல் (சோர்வு), 22. துன்பம், 23. இன்பம், 24. இளமை, 25. மூப்பு, 26. இகல் (பகை), 27. வென்றி (வெற்றி), 28. பொச்சாப்பு (பொல்லாங்கு), 29. ஊக்கம், 30. மறம், 31. மதம் (வெறி) மற்றும் 32. மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும். இவை தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் பகுதியில் காட்டப் பட்டுள்ளன. 02. அஃறிணைப் பண்புகள். அஃறிணைப் பண்புகளை ஆ...