நேரிசை வெண்பாக்கள் (மு.இரசியா பேகம்)

நேரிசை வெண்பா பாடல்கள் கடவுள் வாழ்த்து ********************* சந்தச் சுவையுடன் சங்கத் தமிழையே/ தந்தாய் இறையே தரமாக-எந்நாளும்/ சிந்தும் தமிழைச் சுகந்த மழையாக/ அந்தம் வரைநீயே ஆக்கு!/ 2.வான் சிறப்பு ***************** கருமுகில் மோகித்துக் கட்டியதோர் காதல்/ பெருமுகில் தாகம் பெருகும்-திருவாய்த்/ தெருவெல்லாம் வெள்ளம் திரளப் புரள/ வருகின்ற வான்மழையே வா/ 3.இயற்கை நேசிப்போம் ************************ நில்லாது தென்றல் நிசமாக நீவிவிட/ பொல்லாக் குயில்கூவிப் பாடுமே-பல்விதமாய்க்/ கல்லும் கடுமை கடந்திடச் சொல்லியே/ வெல்க விரும்பிய வாழ்வு./ 4.அன்பினால் ஆள்வாய் *************************** தன்னலம் இல்லாமல் தந்திட அன்பாகும்/ நன்னலமாய் நிற்கும் நிலைத்துலகில்-உன்னதமாய்ப்/ பின்பும் உயிர்ப்பில் பெருகும் பெருந்தனமே/ அன்பை புவனமாய் ஆக்கு./ 5.நட்பின் இலக்கணம் ************************* இணக்கம் அறிந்தால் இணங்கும் இதயம்/ பிணக்கா திருக்கப் பெறுக-குணத்தைக்/ கணக்கை அகற்றிக் கனிந்த இதயம்/ சுணக்கம் அகற்றச் சுகம்./ 6.மரங்கள் நடுவாய் ********************** மரங்கள் நடுவாய் மருகே தெருவில்/ உரமாம் இலைகள் உணர்ந...