6.எளியமுறை தமிழ் இலக்கணம்


எளியமுறை இலக்கணம் - 06.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 

இனிய  வணக்கம்.

 #திணைகளைப் பற்றிக் காண்போம்.

சொற்களில் இரு திணைகள் உண்டு.

ஒன்று #உயர்திணை.

இதில் மக்கள், தேவர், நரகர் ஆகியோர் அடங்குவர்.

மற்றொன்று #அஃறிணை.

மக்கள், தேவர், நரகர் ஆகியோரைத் தவிர்த்து உலகில் இருக்கும் உயிர் உள்ளவை, உயிர் அற்றவை யாவும் அஃறிணை எனப்படும்.

அடுத்தது பால்.
- - - - - - - - - - - - - -
ஆவின் பால், ஆரோக்யா பால், அமலா பால், அப்பு பால் என்றோ, பொருட்பால், அறத்துப் பால், இன்பத்துப் பால் என்றோ நினைத்துக் கொள்ளக் கூடாது.

இது வேறு #பால். இந்தப் பால் #உயர்திணை மற்றும் #அஃறிணையைக் குறிக்க மட்டுமே பயன்படும் பால் ஆகும்.

#ஆண்பால், #பெண்பால், #பலர்பால் ஆகிய மூன்று பால்களும் உயர்திணை ஆகும்.

அவன், அவள், அவர், அவர்கள் போன்றவை.

#ஒன்றன்பால், #பலவின்பால் ஆகிய இரண்டு பால்களும் அஃறிணை ஆகும்.

அது, இது, எது, அவை, இவை, எவை போன்றவை.

அதற்கடுத்து எண்ணிக்கை.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஒன்று என்கிற எண்ணைக் குறிப்பது #ஒருமை ஆகும்.

இரண்டும் இரண்டுக்கு மேற்பட்ட அனைத்தும் #பன்மை ஆகும்.

இவற்றைப் பின்வருமாறு காட்டலாம்.

கந்தன் வந்தான் - உயர்திணை. ஆண்பால். ஒருமை.

மங்கை வந்தாள் - உயர்திணை. பெண்பால். ஒருமை.

தேவர்கள் வந்தனர் - உயர்திணை. பலர்பால். பன்மை.

குதிரை ஓடியது - அஃறிணை, ஒன்றன்பால், ஒருமை.

குதிரைகள் ஓடியது - என எழுதக் கூடாது. #ஓடின என்பதே சரி.

பூக்கள் மலர்ந்தன - அஃறிணை, பலவின்பால், பன்மை.

பூ மலர்ந்தன - என எழுதக் கூடாது. #மலர்ந்தது என்பதே சரி.

ஒருமை, பன்மையை வினைச் சொற்களும் வித்தியாசப் படுத்திக் காட்டும்.

அடுத்தது இடம்.
- - - - - - - - - - - - - -
இடம் மூன்று வகைப் படும். அவை, தன்மை, முன்னிலை, படர்க்கை என்பன.

01. #தன்மை:
பேசுகிறவர் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்வது #தன்மை ஆகும்.

இதிலும் ஒருமை, பன்மை உண்டு.

உ - ம்:
நான் - ஒருமை, நாம், நாங்கள் - பன்மை

02. #முன்னிலை:
பேசுகிறவர் தன் முன்னால் நிற்பவரைக் குறிப்பிடுவது முன்னிலை ஆகும்.

இதிலும் ஒருமை, பன்மை உண்டு.

உ - ம்:
நீ - ஒருமை, நீங்கள் - பன்மை,

நீர் - இலக்கணப் படி பன்மையாகவே கருதப் படுகிறது.

எனினும், பேச்சு வழக்கில்

நீர் - இது ஒருமைக்கும், பன்மைக்கும் இடைப் பட்ட ஒன்றாகக் கருதப் படுகிறது. சரியாகச் சொல்வதென்றால் சற்றே மரியாதைக் குறைவான பன்மையாகத் தற்காலத்தில் எண்ணப் படுகிறது.

திருநெல்வேலித் தமிழில், ‘’நீர், ஓய்…’’ போன்ற சொற்கள் பிரபலம்.

பாஞ்சாலங்குறிச்சி மன்னனான வீரபாண்டிய கட்டபொம்மனை, #நீர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்பவரோ…?’’ என்று ஜாக்ஸன் துரை கேட்டதாக வரலாறு உண்டு.

03. #படர்க்கை:
பேசுகிறவர் தன்னையோ, தன் முன்னால் உள்ளவரையோ குறிப்பிடாமல் அருகில் அல்லது தொலைவில் உள்ளவரைக் குறிப்பிடுவது படர்க்கை ஆகும்.

உ - ம்: 
இவன், இவள், இவர்கள், இது, இவை. அவன், அவள், அவர்கள், அது, அவை போன்றவை.

இவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்தவை தான். இதுவரை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டவை #ஒரு_நினைவூட்டல்_தான்.

அஸ்திவாரம் முடிந்தது. இனிமேல் தான் கவிதை, உரைநடை போன்றவற்றை எழுதத் தேவையான இலக்கணத்தைப் படிக்கப் போகிறோம்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு Building strong. Basement weak என்று சொல்வதைப் போல 

#Basement(#இலக்கணம்) #weak ஆக இருந்தால் #Building(#கவிதை) #strong ஆக இருக்காது.

கவிதைகளின், குறிப்பாக மரபுக் கவிதைகளின் Basement - அஸ்திவாரமே இலக்கணம் தான்.

இன்றைக்கு மரபுக் கவிதை எழுதுபவர்கள் வெகு குறைவு. அதிலும், கவித்துவத்துடன் எழுதுபவர்கள் வெகுவெகுக் குறைவு.

புதுக் கவிதைகள் பற்றி எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

அவற்றுக்குமான இலக்கணத்தைத் தனியாக எழுதலாம் என்று இருக்கிறேன்.


 

Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)