2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

 




1. பகலை காணவில்லை/

தூக்கம் தொலைத்த மனிதர்கள்/

இரவு நேர உணவுக் கடைகள்/


_ சுதந்திர தாசன்


2. இரவு நேரம்// 

பின் தொடருகின்றேன்// 

மின்மினிப் பூச்சிகள்.


                -தமிழ் தம்பி...✍️


3. மூட்டிய அடுப்ப

பிரகாசமாய் உள்ளது

அம்மா முகம்


... தட்சணா மூர்த்தி


4. இரவில் உலகம்/

அமைதியாகத் தூங்குகிறது/

மடியில் குழந்தை/


-யதன் கணேஸ்


5. நடு இரவில்/

கருப்பாகவே தெரிகிறது/

பச்சை மரம்.


-செ.ஸ்ரீகணேஷ் சூர்யா.


6. இரவு நேரத்தில்//

சற்றே அச்சமாக இருக்கிறது//

பேய்க் கனவு//


---தஞ்சை விஜய்...


7. குழம்பிய நீரிலும்/

தெளிவாகத் தெரிகிறது/

நிலவின் பிம்பம்/


-ராதாமணி


8. வானத்து நட்சத்திரங்கள்/

மின்னிக் கொண்டிருக்கின்றன/

மின்மினிப் பூச்சிகள்/


-க.யேசுசகாயம்

இலங்கை


9. தூங்காத இரவுகள் //

விடிய விடிய தள்ளாடிக் கொண்டாடுகின்றன//

வாலிப வயதுகள்//


-கவி நிலா மோகன்

...... தஞ்சாவூர்..........


10. இரவில் உலகம்/

பளிச்சென்று மின்னுகிறது/

மின் விளக்குகள்!


-சிங்கை கார்முகிலன்


11. நிலவின் ஒளியில்/

இரவில் மலர்கிறது/

வீதி விளக்குகள்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.


12. இரவில் உலகம் 

ஆட்டம் அதிகமாகிறது 

குடிமகன்கள்  கூச்சல்


-வ.பரிமளாதேவி


13. படிக்கும் பிள்ளை/

உறக்கம் மறுக்கும்/

இரவு காவலாளி!


-இரா.கி.இராமகிருஷ்ணன்


14. வானில் நட்சத்திரங்கள் /

விட்டு விட்டு ஒளிர்கின்றது/

மின்மினிப்பூச்சிகள்/


-கரவையூர் அ.அகிலன்


15. கவிந்திடும் இரவு /

நடுக்கம் தருகிறது/

பனியின் குளிர்/


-பாலன் திரு 

யாழ்ப்பாணம் 

இலங்கை


16. இருண்ட இரவில் /

அச்சம் கூட்ட வருகிறது /

திருடர்களின் நடமாட்டம் /


-ஜெ.அப்சால் அஹமட்


17. இரவில் மட்டுமல்ல /

பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது /

சிவப்பு விளக்கு /


-ஹரிகுமார் வேலாயுதன்,

தருமபுரி.


18. மொட்டை மரங்கள்/

எங்கும் நிரம்பிய பூக்களாய்/

 நட்சத்திரங்கள்/


- பாண்டிச்செல்வி கருப்பசாமி


19. மின்சாரம் தடைபட்டும் /

தெளிவாகத் தெரிகிறது பாதை /

நிலவின் வெளிச்சத்தில்!!!!


-கவிஞர்.வினோத்


20. இரவு நேரத்தில் /

அச்சம் தருகிறது /

நாய்களின் சண்டை /


-நழீம் ஹனீபா


21. இரவு வானம்/

மங்கலாய்த் தெரிகிறது/

ஆற்று நீரில்!


-முனைவர்.பெ.வெற்றிநிலவன்,

குடந்தை...


22. பகலோடு இரவாய்/

சுற்றிச் சுற்றி வருகிறது/

உலகம் !


-ஷல்மா ஷாஜஹான்


23. இரவின் நிசப்தம்/

அச்சத்தைக் கூட்டுகிறது/

ஆந்தையின் அலறல்.!


-மு.விஜயசாரதி


24. வெளியூர் பேருந்து//

எங்கும் நிரம்பி வழிகிறது//

பூக்கூடை வாசம்//


~க.குணசேகரன்


25. வானில் நட்சத்திரங்கள்/

எண்ண முடியவில்லை/

மரத்திலுள்ள வௌவால்களை.!


-முல்லை நிரோயன்


26. இருளில் வானத்தில்/

 மகிழ்வைத் தருகின்றது /

ஆகாய விமானம்/


 -தஞ்சை.கோ.பாலசுப்ரமணியன்


27. பாலூட்டும் தாய்

பாதியில் எழுகிறாள்

உறக்கத்தை விட்டு


-எம்.ஷாஹுல் ஹமீது.


28. நள்ளிரவு கனவு/

தூக்கத்தைக் கலைக்கும்/

சத்தமிடும் பல்லிகள்/


-கோட்டீஸ்வரி ராமசாமி


29. இரவின் அமைதியை //

நித்தம் நினைவுபடுத்துகின்றது //

இயங்கும் கடிகாரசத்தம் //


-பிரபு.ஐயாத்துரை


30. நிலவுடன் வானம் /

பிரகாசமாய் மின்னுகிறது/

குளத்து நீரில் நிலா/


-சென்னிமலை அ.சீனிவாசன்


31. பௌர்ணமி நிலவு/

பார்க்க அழகாக இருக்கிறது/

மின்னும் நட்சத்திரங்கள்/


-ப.சொக்கலிங்கம்


32. இரவின் அமைதி

மீண்டும் வருகிறது

அமாவாசை இரவு


-லினுஜன்


33. கனவுலகம்

விழிக்கையில் உறங்குகின்றது

இரவில் உலகம்.


-செல்லையா வாமதேவன்


34. இரவு நேரத்தில்/

ஒளி வீசி மின்னுகிறது/

இதயத்தில் அவளின் நினைவுகள்/


-கார்த்தி.கோ


35. இரவின் நிசப்தத்தை ஊடறுக்கின்றன/

அங்கும் இங்குமாய்/

மின்மினிப் பூச்சிகள் /


-யோகாபாரதி


36. மயான அமைதி/

விடிகாலை ஆனாலும் பயம்/

சுவர்க்கோழிச் சத்தம்/


-சாக்கை பொன்னழகு


37. நடுநிசி காவலர்கள் / 

நடைமேடையில் உறங்குகின்றனர் /

பிச்சைக்காரர்கள் 

           - லதா


38. இரவின் இருட்டில்/

ஆங்காங்கே வெளிச்சங்கள்/

கையில் அலைபேசி!

-ஆ.பூமாதேவி


39. இரவில் உலகம்//

நிசப்தமாய் உறங்குகிறது//

விழித்திருக்கும் காவலாளி//

   -செல்லம் ரகு


40. இராக்கால உலகம்/

படிப்படியாய் இளமை பிறக்கிறது/

வளர்பிறைச் சந்திரன்/

-தோப்பூர் கவி நாஸிர். எம். இர்ஷாத்


41. சூரியன் மறைந்ததும்/

ஒளி விளக்குகளால் மின்னுகிறது /

கோவில் திருவிழா !/

- பொத்துவில் மீராசாகிபு சமூன்


42. தார்ச்சாலைப் பேருந்து//

இருளைக் கிழித்துச் சென்றது//

வானில் மின்னல்!!

 -நாகலெட்சுமி இராஜகோபாலன்


43. இரவு நேரத்தில்//

காவலர்கள் ரோந்து//

திருடர்களுக்கு இடையூறாய்//

 -ஜெய வெங்கட்


44. இருட்டிய பிறகு//

வெளுக்கத் தொடங்குகிறது//

மல்லிகைத் தோட்டம்//

   -எம்.ஆர்.ஜெயந்தி


45. இரவில் உலகம் //

மூழ்கிக் கொண்டிருக்கிறது //

கொள்ளைநோய் //

   -உடுமலை சே.ரா . முஹமது


46. இருண்ட இரவு//

பயமில்லாமல் விளையாடுகின்றன// 

வானில் நட்சத்திரங்கள்.

       - கீதாரமணி


47. இரவில் உலகம் 

தெளிவாகத் தெரிகின்றன// 

பறக்கும் மின்மினிப் பூச்சிகள்!!

      -அனுராதா நாகப்பன்


48. இரவின் நிசப்தம்/

பயம் தருகிறது/

மிருகங்கள் நடமாட்டம்/

   -ஜெயலெட்சுமி மாணிக்கம்


49. அணைத்த மின்விளக்கு/ 

விட்டு விட்டு ஒளிர்கிறது /

தாத்தாவின் சுருட்டு./

   -மணி தியாகேஸ்


50. இரவின் உலகம்/

நிசப்தமாக இருந்து கொண்டிருக்கிறது/

மழலையில்லா வீடு/

   -சுமி முருகன்


51. இரவு நேரத்திலும்/

ஊரைச் சுற்றி வரும்/

காவலர் வாகனம்/

   -கலாராணி லோகநாதன்


52. நிழல் படம்/

அழகாக காட்சியளிக்கிறது/

ஆலிவ் மரம்/

     -நிஸ்றின் யூசுப்.


53. வெளியில் வரவே /

பயமாய் இருக்கிறது/

இரவில் உலகம்/

  -கலைச்செல்வன்,கடலூர்,                                    


54. நிலவில்லா வானம்/

விளக்கின்றி கவலையில் இருக்கிறது/

ஏழையின் கூரைவீடு/

   -மு.வா.பாலாஜி


55. இரவு நேரம்/

இனிதே வரவேற்பு/

புதுமண தம்பதிகள்/

   -த. கலைவாணி சதீசு, புதுச்சேரி


56. வெற்று யாசகத்தட்டு /

இரவு உணவால் நிரம்புகிறது /

 நாயின் வயிறு /

 -மனோகரி ஜெகதீஸ்வரன் 


57. நிலாக்கால நள்ளிரவு/

விரகத்தோடு கூவிக் கொண்டிருக்கிறது/

துணையிழந்த குயில்!

   -மெ. கிஷோர்கான்


58. சுழலும் பூமியில்//

இருள் கவ்வத் தொடர்கிறது//

அமாவாசை நாள்//

    -ஐ.துஷ்யந்தன்


59. இரவில்  உலகம்/

அமைதியாக நகர்கிறது/

விடியலை தேடி!

      -சு.கேசவன்


60. இருட்டு நிறைந்த அறை 

மேன் மேலும் இருட்டாக 

அமாவாசை

   -பாண்டியராஜ்


61. இரவுப் பொழுதில்

விளக்கின் ஒளியில் சிக்குண்டது

படர்ந்த இருள்.

      -ந.மீனாகோபி


62. இருண்ட வீடு/

கண்களுக்கு தெரியவில்லை/

தாத்தாவின் கைத்தடி/

      ✍️பா.ச.கண்ணன்


63. மாலைப் பொழுதில் /

இருண்டு கொண்டு வருகிறது /

மழை மேகம் /

    -அருண் சிவா...


64. இருள் படர்வதும்/

அழகாய்த்தான் தோன்றுகிறது/

வானில் நிலா./

    -கவிஞர் ச.சுரேஷ். கும்முடிப்பூண்டி


65. தூங்கும் உலகம்/

இரகசியமாய் எழும்புகிறது/

மானுட சமத்துவம்../

   -ஐ.தர்மசிங்


66. நிலவின் ஒளியில்/

தெளிவாய்த் தெரிகின்றன/

மரக் கிளைகள்/

    -சி.பாக்கியராஜ்


67. இரவில் உலகம்/

நடுக்கிக் கொண்டி.ருக்கிறது/

வானில் நட்சத்திரம்../

   -ஷர்ஜிலா யாகூப்


68. இரவில் உலகம்/

இதழ் திறந்து சிரிக்கிறது/

நட்சத்திர கூட்டம்./

  -வைர. வசீகரன், யாழ்ப்பாணம்


69. இரவில் பேய்க்கனவு/

மன நிம்மதியைத் தரவில்லை/

ஓட்டுநரின் உறக்கம்/ 

      -மா.சு.திருக்குமரன்.


70. நிலவு மகள்/

நிலத்தில் நீந்துகிறாள்/

குளத்தில் அவள்./

   -ஐ.எம்.ஜெமீல்.


71. இரவுப் பொழுது/

உறக்கமில்லாமல் தவிக்கிறது/

வானத்தில் முழுநிலா/

    -வைர. நாகராசன்


72. இருண்ட காடு /

சத்தம் அதிகமாக உள்ளது /

காட்டுவாசிகள் சண்டை ./

       -கவிகெஜா


73. அமாவாசை இரவு /

நிம்மதியைத் தருகிறது /

நிசப்த அமைதி /

      -ரகுமான் நபீர்


74. இரவு பொழுது/

இனிமையாக இருக்கிறது/

காதலியின் நினைவு./

    -சக்திவேல் இராவணன்


75. இரவுப் பணி /

காவலாளியின் கூடவே வருகிறது /

முழு நிலவு //

    - கி.இரகுநாதன்


76. வீதியோரக் கடைகள்/

வாழ்வை இழக்கின்றன/

விட்டில் பூச்சிகள்../

  -கிருஷ்ணலதா வசீகரன், ஜெனீவா- சுவிஸ்


77. இரவில் உலகம்/

பேரிரைச்சலாக இருக்கிறது/

இடியும் மின்னலும்/

    -கிரானியன் அபிலாஷ்


78. இரவில் உலகம்/

மறையாமல் இருக்கிறது/

ஏழையின் பசி/

   -வட்டக்கச்சி வினோத்

Comments

  1. எங்களுடைய கவிதைகளையும் சேர்க்க முடியுமா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)